விழுப்புரம்,ஆக.14-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் வட்ட பேரவைக்கு செயலாளர் ஆர்.கண்ணப்பன் தலைமை தாங்கினார். மத்திய குழு உறுப்பினர் பி.சண்முகம், மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் ஆர்.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
கோலியனூர் ஒன்றியம், கானை ஒன்றியம் இணைந்து இதுவரை விழுப்புரம் வட்டக்குழு வாக செயல்பட்டு வந்தது. தற்போது, காணை ஒன்றியம் தனியாக பிரிக்கப்பட்டது. 9 பேர் கொண்ட இந்த ஒன்றி யத்திற்கு செயலாளராக பி.சிவராமன் தேர்வு செய்யப் பட்டார். இந்த கூட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ.நாகராஜ், எஸ்.பிரகாஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.