districts

img

குறிஞ்சிப்பாடி அய்யன் ஏரி தூர்வாரும் பணி துவக்கம்

கடலூர், பிப்.11- வடலூர் நகராட்சியில் அமைந்துள்ள அய்யன் ஏரியை கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் மற்றும் 15வது மத்திய நிதிக்குழு திட்டங்களின் கீழ் ரூ.192.00 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி புனரமைப்பு பணியை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார், இதைத் தொடர்ந்து,  குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் அய்யன் ஏரி, குறிஞ்சிப்பாடி தாழை ஓடையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், முன்னிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் சுப்பராயலு, குறிஞ்சிப்பாடி பேரூராட்சி தலைவர் கோகிலா குமார், பேரூராட்சி துணைத் தலைவர் ராமர், உதவி இயக்குநர் பேரூராட்சிகள் வெங்கடேசன், வடலூர் நகராட்சி ஆணையாளர் ரஞ்சிதா, செயல் அலுவலர் பாலமுருகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.