districts

img

சிதம்பரம் நூலகத்தில் பயின்று அரசு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

சிதம்பரம், நவ 24- சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட நூலக ஆணைக்குழு முழுநேர கிளை நூல கத்தில் 57வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் சந்திர சேகரன் தலைமை தாங்கினார். முதல் நிலை நூலகர் முனியப்பன் வரவேற்றார். ரோட்டரி சங்க முன்னாள் துணை நிலை ஆளுநர் முகமது யாசின் முன்னிலை வகித்தார். சிதம்பரம் கிளை நூலகர் அருள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில், சிதம்பரம் துணை காவல் கண் காணிப்பாளர் லாமேக் கலந்து கொண்டு சிதம்பரம் கிளை நூலகத்தில் படித்து டிஎன்பி எஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற்ற 7  பேர் காவல்துறை தேர்வில் தேர்ச்சி பெற்ற 5  நபர்கள் உள்ளிட்ட  மொத்தம் 12 மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, இந்த நூலகத்தில் தொடர்ந்து புரவலர்களாக உள்ள வர்களுக்கு பட்டயத்தை வழங்கினர்.  இந்நிகழ்ச்சியில், கிரீடு தொண்டு நிறு வனத்தின் நிறுவனர் நடனசபாபதி,  தேசிய நல்லாசிரியர் ஏகாம்பரம்,  நகர் மன்ற உறுப்பி னர் சி.கே.ராஜன்,  முன்னாள் மாவட்ட மைய நூலகர் சந்திரபாபு,  சமூக ஆர்வலர் கண்ண தாசன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறினார். கிளை நூலகத்திற்கு முதல் தளம் கட்டு வதற்கு ஆணை வழங்கிய தமிழக அரசுக்கும்,  நூலகத்துறைக்கும் வாசகர் வட்டத்தின் சார்பாக நன்றி தெரிவித்தனர்.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை நூலக பணியாளர்கள் ரங்க ராமானுஜம் மற்றும் முரளி செய்தனர். நூல கர் சிவப்பிரகாசம் நன்றி கூறினார்.