districts

img

தங்கம் வென்ற புதுச்சேரி மாணவருக்கு பாராட்டு

சென்னை, மார்ச்.4- மலேசியா நாட்டின் மெலக்கா நகரத்தில் காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த பிப்ரவரி 19 தேதியிலிருந்து 27 வரை நடைபெற்றது. இதில் புதுச்சேரி, பெத்திசெமினார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வரும் ரெட்டியார் பாளையத்தை சேர்ந்த மாணவர் ராகுல் ராமகிருஷ்ணன் இந்தியா சார்பில் பங்கேற்றார்.  மொத்தம் 9 சுற்றுகளாக நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் தோல்வியே காணாமல் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். அதேபோல் 10 வயதிற்குட்பட்ட பிலிட்ஸ் பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்றார். இதனைத்தொடர்ந்து திங்கட்கிழமை புதுச்சேரி திரும்பிய மாணவர் ராகுல் ராமகிருஷ்ணனுக்கு, முதல்வர்  ரங்கசாமி சால்வை அணிவித்து  பாராட்டினார். உடன் அமைச்சர் ஜெயக்குமார், பெத்தி செமினார் பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ், பயிற்சியாளர் ஸ்வராஜ் பலித் ஆகியோர் உடனிருந்தனர்.