கிருஷ்ணகிரி, அக்.1- கறிக்கோழி வளர்ப்புக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவ சாயிகள் சங்க மாவட்ட முதல் மாநாடு உத்தனப்பள்ளியில் மாவட்டத் தலை வர் நாராயணப்பா தலைமையில் நடைபெற்றது. நிர்வாகிகள் குண்டப்பா, நடராஜா,சம்பங்கி அண்ணா முன்னிலை யில் வகித்தனர். மாநில பொதுச் செய லாளர் கே.பி. பெருமாள், மாநில துணை செயலாளர் ஏ.ஜீவானந்தம். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ்,தலைவர் முருகேசன் கலந்து கொண்டனர். கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள், ஏற்றுமதியாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும், இன்சூரன்ஸ், வங்கி கடன் வழங்க வேண்டும்,கோழி வளர்ப்புக்கான பிற செலவுகளையும் கணக்கில் கொண்டு கோழி வளர்ப்புக்கு கூலி 20 உயர்த்தி வழங்க வேண்டும்,போக்குவரத்து காவல் துறையே கோழி ஏற்றுமதி செய்யும் வண்டிகளை பிடித்து அபராதம் விதிக்கக்கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் மாவட்டத் தலைவராக என்.கோபி, செயலாளராக எம்.எம்.ராஜு பொருளாளராக அன்னையப்பா செய்யப் பட்டனர்.