திருவள்ளூர், ஜன.3- திருவள்ளூர் அருகில் உள்ள காக்களூர் ஏரி சீரமைக்கப்படும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர்க ளிடம் கிருஷ்ணசாமி எம்எல்ஏ உறுதியளித்தார். திருவள்ளூர் அருகில் உள்ள காக்களூர் ஏரியை தூர் வாரி, கரையை பலப் படுத்த வேண்டும், ஏரியின் நீர் கொள்ளளவை உயர்த்த வேண்டும், ஏரி கரையின் மேல் சேதமடைந்த நடை பாதையை சீரமைக்க வேண்டும். மக்கள் பயன்படுத்தும் வகையில் பூங்கா அமைத்து, மின் விளக்குகள் பொறுத்த வேண்டும், ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும், போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி பூந்த மல்லி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ண சாமியிடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.மோசஸ்பிரபு தலை மையில் ஒன்றிய செயலா ளர் தனசேகர், எழுத்தாளர் கண்ணன் ராமசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலை வர் ஜி.சம்பத் ஆகியோர் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பி னர், தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாகவோ அல்லது சுற்றுலா துறை மூலமாகவோ கோரிக்கையை நிறைவேற்று வதாக உறுதியளித்தார்.