திருவள்ளுர்,செப்.12- கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பில்லா குப்பம் பகுதியை சேர்ந்த 55 வயது பெண் கணவர் மற்றும் மகன்களுடன் வசித்து வருகிறார். திங்களன்று மாலை அவருக்கு சொந்த மான ஆடுகளை குருராஜா கண்டிகை ஊராட்சி பில்லா குப்பம் பகுதியில் உள்ள கங்கை அம்மன் கோவில் பின்புறம் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு யாரும் இல்லை. இதனை நோட்டமிட்டு வாலிபர்கள் 3 பேர் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை குண்டு கட்டாக தூக்கி கடத்தி சென்றனர். பின்னர் அங்குள்ள மறைவான பகுதியில் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வரும் 3 பேர் தனக்கு இக்கொடுமையை நடத்தியதாக அந்த பெண் விளக்கினார். இதைத்தொடர்ந்து அதே பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய மூன்று பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் புகார் கூறிய பெண்ணுக்கு சென்னையில் உள்ள அரசு மருத்துவ மனையில் மருத்துவ பரிசோதனை செய்ய வும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் சி எஸ் ஆர் கூட பதிவு செய்யாததை கண்டித்து அப்பகுதி மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக் குழு உறுப்பினர்கள் கோபால கிருஷ்ணன், லோகநாதன் ஆகியோர் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவ மனை நுழைவாயிலை முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் மேல்சிகிச்சைக்காக சென்னை ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்டனர். சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி வேண்டுகோள் மூதாட்டியை பாலியல் வன்கொடு மைக்கு உட்படுத்திய நபர்கள் மீது உரிய சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அதன் நிர்வாகிகள் விடுத்துள்ள அறிக்கையில் மருத்துவ பரிசோ தனை அறிக்கை அடிப்படையில், முறையான விசாரணை நடத்தி, உரிய சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும், குற்றவாளி களை உடனடியாக கைது செய்ய வேண்டும் மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்மிடிப் பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் த.கன்னியப்பன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். முன்னதாக மாதர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அ.பத்மா, துணை நிர்வாகிகள் கவிதா, ஜீவிதா, சென்னை ராயபுரம் சிபிஎம் இடை கமிட்டி செயலாளர் பவானி ஆகியோர் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அப்பெண்ணை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த சம்பவத்தில் உரிய தீர்வு கிடைக்க மாதர் சங்கம் துணைநிற்கும் என அவரிடம் தெரிவித்துள்ளனர்.