districts

கேரள ஆளுநர் ஆரிப் கான் அந்தப் பதவிக்கே தகுதியற்றவர்

புதுதில்லி, டிச.18- “கேரள ஆளுநர் அந்தப் பதவிக்கே தகுதியற்றவர்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாடியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அர சியல் தலைமைக்குழு வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரள ஆளுநர், ஆரிப் முகமது கான், அனைத்து வரம்புகளையும் மீறி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தின் மீது, தன்னு டைய ஒழுங்கற்ற நடத்தை காரண மாக,  தொடர்ந்து தாக்குதல்களைத் தொடுத்து வருகிறார். இதற்கு சமீபத் திய எடுத்துக்காட்டு, அவர், “மாநி லத்தில் அரசமைப்பு இயந்திரத்தின் சரிவு தொடங்கியிருக்கிறது” என்று அறிக்கை வெளியிட்டிருப்பதாகும். மாநில அரசாங்கத்திற்கு எதிராக இவ்வாறு விடுக்கப்படும் அச்சுறுத் தல்கள் அனைத்தையும் கேரள மக்கள் முற்றாக நிராகரித்திடுவார்கள். கேரள மற்றும் கோழிக்கோடு பல்கலைக் கழகங்களின் செனட் இடங்களுக்கு, ஆளுநர், அப்பல் கலைக் கழகங்களின் வேந்தர் என்ற  முறையில் தன் பதவியினைத் துஷ்பிர யோகம் செய்து, ஆர்எஸ்எஸ் நபர் களை  நியமனம் செய்திட எடுத்த நட வடிக்கைகளுக்கு மாணவர்கள் மத்தி யிலிருந்து எழுந்துள்ள எதிர்ப்புக் கிளர்ச்சிகளை எதிர்கொண்டிருக் கிறார். மாணவர்கள் அமைதியாகத் தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்திட ஜனநாயக உரிமை பெற்றிருக்கும் அதே சமயத்தில், இந்தக் கிளர்ச்சிப் போராட்டங்களுக்காக ஆளுநர் மாநில முதல்வர் மீது பழி சுமத்த முற் பட்டிருப்பதுடன், அவரை அவ மதிக்கும் விதத்திலும் பேசியுள்ளார். அரசமைப்புச்சட்டத்தின்கீழ் பதவி வகித்திடும் ஆளுநர் இது போன்று நடப்பதற்கு வழியே இல்லை. இவ்வாறு இவர் இந்தப் பதவியில் நீடிப்பதற்குத் தகுதியற்றவர் என்ப தை இதன்மூலம் மெய்ப்பித்திருக் கிறார். இவ்வாறு அரசியல் தலை மைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது. (ந.நி.)