விழுப்புரம், ஜூன் 16-
விழுப்புரம் மாவட்ட காவல் நிலை யங்களில் இடைத்தரகர்கள், கட்டப் பஞ்சாயத்து செய்வோரை அனுமதிக்கக் கூடாது என்று காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், கடந்த மாதம் 25 ஆம் தேதி பொறுப்பேற்று கொண்டார். அன்று முதல், காவல்துறை யில் பணிபுரிவோருக்கு கட்டாய விடுப்பு கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களை உரிய முறையில் விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் யாரிடமும் கையூட்டு (லஞ்சம்) பெறுதல், கட்டப்பஞ்சாயத்து செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. அப்படி மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நிலம் உள்ளிட்ட சிவில் சம்பந்தமான புகார்களை காவல் நிலையங்களில் விசாரிக்கக்கூடாது. நீதிமன்றம் சென்று நிவாரணம் தேடிக்கொள்ளு மாறு புகார்தாரர்களிடம் கூறவேண்டும். இடைத் தரகர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்வோரை காவல் நிலையத்திற்குள் அனு மதிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
காவல்துறையினருக்கு அறிவுறுத்தி யுள்ளதோடு, இதுகுறித்த அறிவிப்பு பிரசுரங்களை (நோட்டீஸ்) அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்க ளின் பார்வையில் தெரியும்படி ஒட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இதுகுறித்த அறிவிப்பு பிரசுரங்களை காவல்துறையினர் ஒட்டினர்