சென்னை,மார்ச் 14- என்றென்றும் மனித குலத்திற்கு வழி காட்டும் கார்ல் மார்க்ஸ் அவர்களுக்குச் சென்னை மாநகரில் சிலை நிறுவ முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வருக்கு தொழிற்சங்கத் தலைவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மத்திய குழு உறுப்பி னருமான அ சவுந்தரராசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மார்க்ஸ் 140வது நினைவு தினத்தை முன்னிட்டு கட்சியின் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் மார்க்ஸ் உருவப்படத் திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சென்னை கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே செவ்வாயன்று (மார்ச் 14) நடை பெற்றது. இதில் பேசிய அவர், முதலாளித் துவத்தின் தொடக்க காலத்திலேயே அதன் அத்தனை ஆட்டங்களைப் பற்றியும் அறிந்திருந்தவர் மார்க்ஸ். அதனால் தான் அதில் பாதிக்கப்பட இருக்கும் கோடிக் கணக்கான உலக மக்களை அதற்கு எதிராக எழுவீர், போராடுவீர் என்று குரல் கொடுத் தார். முதலாளித்துவத்தின் செயல்பாடு களின் நுணுக்கங்கள் உள்பட தேடித் தேடி வாசித்துத் திரட்டி மார்க்ஸ் ஏங்கெல்ஸ் உருவாக்கிய மூலதனம் புத்தகம் வெளி யான போது முதலாளிகள் அஞ்சி நடுங்கி னர், தங்களை ஆட்டிப் படைக்க வந்த பெரும் பூதம் என்று மார்க்ஸ் வருணித்தது போலவே உணர்ந்தனர். யாரும் மூலதனம் பற்றி புகழ்ந்தோ விமர்சித்தோ எழுதவில்லை. அவர்களது அமைதியை மௌன சதி என்று மார்க்ஸ் ஏங்கெல்ஸ் குறிப்பிட்டனர். புத்தகம் பற்றி எழுதினால் அதைப் பரப்புவது ஆகி விடும் என்ற மவுனம் அது. ஆனால் சுரண்டலுக்கு எதிரான அந்தத் தத்துவம் இன்றும் உலகில் முன் நிற்கிறது.
2008 உலகப் பொருளாதார நெருக்கடி நேரத்தில், எல்லா நிபுணர்களும் மூலதனம் நூலை நோக்கி ஓடினர். உலகின் பெரிய மதத்தின் பெரிய தலைவர் போப், மூலத னத்தை மறு வாசிப்பு செய்ய வேண்டிய வேளை வந்து விட்டது என்றார். இங்கே ஒரு பிள்ளைப் பூச்சி, மார்க்ஸ் பற்றிப் பேசி இருக்கி றது. அது தான் ஆளுநர் ரவி. தாராளமாகப் பேசட்டும். தெரிந்து பேசட்டும். ஆனால் பிள்ளைப் பூச்சி மண்ணைக் கொஞ்சம் துருவிக் கொடுத்து விடுவது போல், ரவி பேசியது ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. பள்ளி மாணவர்கள் முதல் இளைஞர்கள், ஏன், அரசியல் தலைவர்கள் வரை மார்க்ஸ் பற்றி வாசிக்கத் தொடங்கி உள்ளனர் என்றார் அ.சவுந்தரராசன். மாவட்ட செயலாளர் ஜி செல்வா தலை மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரா.முரளி, திருவேட்டை, எஸ் கே முருகேஷ், வே ஆறுமுகம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதிக் குழு செயலாளர் கவிதா கஜேந்தி ரன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.