காஞ்சிபுரம் மாவட்டம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா பூங்காவில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் செவ்வாயன்று நடைபெற்ற கலைச் சங்கமம் நிகழ்ச்சியில் ஆர்.துர்காதேவி கலைக்குழு, மாசிலாமணி கலைக்குழு, தேவராஜன் கலைக்குழு, சந்திரன் கலைக்குழு, ஆகிய கலைக்குழுக்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார்.