திருவள்ளூர் மாவட்டம்,திருப்பாலைவனம் ஊராட்சிக்கு உட்பட்ட காஞ்சி வாயல் கிராமத்தில் 2019 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாரர் இன்னும் ஊராட்சி மன்ற அலுவலகத்திடம் கட்டிடத்தை ஒப்படைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே கொட்டும் மழையில் அப்பகுதி குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பெண்கள் அங்கன்வாடி மையம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.