மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரோட்டரி நகர் கிளைச் செயலாளர் விநாயகத்தின் தாயார் கே.கிருஷ்டம்மாள் படத்திறப்பு நிகழ்வு வியாழனன்று (அக்.4) நடைபெற்றது. தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் படத்தை திறந்து வைத்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.