சென்னை, ஜன. 8- அமோனியா வாயு கசிவுக்கு காரணமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார். சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் உரம் தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து அமோனியா வாயு கசிவு வெளியேறியதில் பாதிக்கப்பட்ட மக்கள் 13ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை யில் போராடும் மக்களுக்கு ஆதர வாக சிபிஎம் சார்பில் திங்களன்று (ஜன. 8) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் கலந்து கொண்டு கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில், இந்த நிறுவனத்திலிருந்து பல முறை வாயு கசிவு ஏற்பட்டு இங்கு வசிக்கும் மீனவ மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் அவர்களின் வாழ்வாதார மும் பாதிக்கப்படுகிறது. ஆனால் இந்த முறை வாயு கசிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டவுடன் பொறுத்தது போதும் இனி மேலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்படக் கூடாது என மக்கள் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்தனை ஆண்டுகளாக இந்த ஆலையை மூட வேண்டும் என யாரும் கூற வில்லை. டிசம்பர் 26ஆம் தேதி வாயு கசிவு ஏற்பட்டவுடன் உடனடி யாக தமிழக அரசு தற்காலிக மாக ஆலையை மூட உத்தரவிட்டதை வரவேற்கி றோம். சுற்றுச்சூழல் அதிகாரி கள் 20 நிமிடம் மட்டுமே வாயு கசிவு ஏற்பட்டதாகவும், உடனே தடுக்கப்பட்டு விட்டது என்றும் அதனால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரி வித்துள்ளனர். பாதிப்பு இருப்ப தால்தானே தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டது. அப்படியென்றால் நிரந்தரமாக மூடு என அப்பகுதி மக்கள் கோரு வது நியாயம்தானே. எனவே அரசு இந்த போராடும் மக்க ளின் கோரிக்கையை நிறை வேற்ற முன்வர வேண்டும் என்றார். இப்படி எல்லா தொழிற்சாலைகளையும் மூடி விட்டால் எப்படி இளைஞர்க ளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என சிலர் கேள்வி எழுப்பலாம். சென்னையில் உலக முத லீட்டார் மாநாடு நடைபெற்றது. உலகில் உள்ள முதலாளிகளை எல்லாம் அழைத்து தமிழ்நாட்டில் தொழில் செய்வதற்கு நல்ல சூழல் உள்ளது, எனவே இங்கு மூலதனம் செய்து தொழில் தொடங்குங்கள் என வேண்டுகோள் விடுத்தார். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை உரு வாக்குவதற்கான முயற்சி களை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளதை வர வேற்கிறோம், பாராட்டுகிறோம். தொழில் வளர்ச்சி தேவையா என்றால் தேவைதான். மக்களை பாதிக்காத வளர்ச்சி தேவை என்று கூறுகிறோம். இந்த ஆலையை மூடுங்கள் என்று கூறுகிறோமே தவிர தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஆலைகளையும் மூடுங்கள் எனக் கூறவில்லை. எந்த ஆலை யினால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறதோ அந்த ஆலையை மூட வேண்டும் என்றுதான் கூறுகிறோம். தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மக்களை அழிக்கும் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுகிறோம். கண்காணிக்க வேண்டும் ஒன்றிய அரசின் கீழ் உள்ள தொழில்துறை பாது காப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் இதுபோன்ற ஆபத்தான நிறுவனங்களை தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு நிபுணர் குழு அமைத்து தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சுக்கழிவுகள் கடலில் கலக்காமல் எப்படி வெளியேற்றலாம் என ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இங்குள்ள தொழிற்சாலைகள் தனது சிஎஸ்ஆர் நிதியை முழுமையாக இந்த பகுதி மக்க ளின் வளர்ச்சிக்கு செலவிடு கிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கைதுசெய்க சாலையில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நேர்ந்தால் எப்படி ஓட்டுநரை காவல்துறை கைது செய்கிறதோ, அதுபோல் இந்த விபத்தை ஏற்படுத்திய நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்து, சம்பந்தவர்களை கைது செய்திருக்க வேண்டும். ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் நியாயம் கேட்டு அறவழியில் போராடுபவர்கள் மீது காவல் துறையினர் வழக்கு போடுவது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பினார். எனவே போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்கை உடனடி யாக திரும்பபெற வாங்க வேண்டும். விபத்துக்கு காரண மானவர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பகுதிச்செயலாளர் எஸ்.கதிர்வேல்ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் ஆகியோரும் பேசினர். இதில் மாமன்ற உறுப்பி னர்கள் ஆர்.ஜெயராமன், பா.விமலா, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.பாக்கிய லட்சுமி, எல்.பி.சரவணதமிழன், அ.விஜயகுமார், கே.எஸ்.கார்த்தீஷ்குமார், எஸ்.ராணி, ஆர்.லோகநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.
அமில மண்டலமாக மாறும் எண்ணூர் பகுதி
வடசென்னையில் எண்ணூர் பகுதியில் ஒருபுறம் உரத்தொழிற்சாலை மறுபுறம் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள். வடசென்னை அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் முழுவதும் கடற்கரை ஓரங்களில் கொட்டப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் காட்டுப்பள்ளியில் புதிய துறைமுகம் அமைக்க உள்ளனர். இவ்வாறு எண்ணூர் பகுதி முழுவதும் படிப்படியாக அமில மண்டலமாக மாறி வருகிறது. கடலும் கடல் சார்ந்த மண்ணும் யாருக்கு முன்னுரிமை என்றால் மீனவர்களுக்குத்தான் முன்னுரிமை. அங்கு போய் ஏன் இப்படிப்பட்ட ஆபத்தான தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். மேலும் ஆலைகளிலிருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகள் கடலில் கலப்பதால் மீன்வளம் அழிவதோடு, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அதனால்தான் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு திடீரென ஒரே நாளில் அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது. இயற்கையை நாசப்படுத்தினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படும். எனவே சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.