கள்ளக்குறிச்சி, நவ–5 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 60 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ் சந்தா ஒப்படைப்பு மாநில கருத்தரங்கம் சனிக்கிழமை (நவ.4) உளுந்தூர்பேட்டையில் நடை பெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டச் செய லாளர் தலைமை டி.எம். ஜெய்சங்கர் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் ‘மார்க்சிஸ்ட் கட்சியின் சாதனை சரித்திரம்’ தலைப்பில் கருத்துரை வழங்கினார். மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் சிறப்புரையாற்றுகை யில், பல்வேறு விதமான சித்தாந்தங்கள், கருத்தியல் தத்து வங்கள் மோதக்கூடிய நாடாக இந்தியா இருக்கின்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் வரலாற்றுக் காலம் தொட்டு எண்ணற்ற கருத்துகள் சிந்தனைகள் மோதிக் கொண்டிருக்கின்ற மண்ணாக இருக்கிறது. உலகில் 13 ஆயிரம் மொழிகள் பேசப்பட்டு வருகின்ற போதும் 200 மொழிகளுக்குத் தான் எழுத்து வடிவம் இருக்கின்றது. குறிப்பாக ஆறு மொழிகள் தான் எழுத்து வடி வத்திலும் பேச்சு வடிவத்திலும் அழியாமல் நிலைத்திருக்கின்ற உலக மொழிகளாகும் இதில் இன்றளவும் மக்களால் பயன்படுத்தப்பட்டு பேசுவது எழுதுவது என்றால் அது ஒன்று சீன மொழி, மற்றொன்று தமிழ் மொழி. சமஸ்கிருதம் அதிகளவு மக்களால் பேசப்படுவதில்லை சமஸ்கிருதத்திற்கு பத்திரிகைகள் கிடையாது. தற்போது இந்துத்துவா என்ற தத்துவ கருத்துகளை மக்கள் மத்தியில் மிக வேகமாக கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள். தமிழகம் திராவிட இயக்கங்கள், பெரியாரிய இயக்கங்கள், கம்யூனிச இயக்கங்கள் போன்ற பலமாக இருக்கும் மாநிலம். ]
ஆனால் இதை யும் தாண்டி இந்துத்துவா பரவல் தமிழ்நாட்டில் நடந்தேறி வருகிறது. மக்கள் மத்தியில் திட்டமிட்டு இந்துத்துவா கருத்தியலை கொண்டு செல்லும் நிலை உள்ளது. மக்கள் மத்தியில் நிலவும் இறை உணர்வுகளை நாம் கொச்சைப்படுத்துவதில்லை. ஆனால் அது வெறியாக மாறி மற்ற மதத்தினரை அச்சத்திற்கு உள்ளாக் குவதை கண்டிக்கின்றோம். இந்துத்துவா அரசியலை சில அமைப்புகள் முன்னெடுத்து செல்கின்றன. இது இந்து நாடு, இது இந்துக்களுக்கு மட்டும் சொந்த மான நாடு என்று கூறி சிறுபான்மை யின மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்து கிறார்கள். வகுப்புவாதிகளிடமிருந்து தமிழக மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும் பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். 1860 மார்க்சிஸ்ட் சந்தா இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் தத்துவார்த்த இதழுக்கு கடலூர் மாவட்டத்தின் சார்பில் 600, கள்ளக்குறிச்சி 420, விழுப்புரம் 300, திருவண்ணாமலை 240,.மயி லாடுதுறை 200 என மொத்தம் 1860 சந்தாக்கள் கே.பாலகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. கருத்தரங்கில் 5 மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஏழுமலை நன்றி கூறினார் இதில் மாநிலக்குழு உறுப்பி னர் ஜி.ஆனந்தன், மாவட்ட செய லாளர்கள் ஜி.மாதவன் (கடலூர்) என்.சுப்பிரமணியன் (விழுப்புரம்) எம்.சிவக்குமார் (திருவண்ணாமலை)பி.சீனிவாசன் (மயிலாடுதுறை) மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். முன்னதாக கல்லை குறிஞ்சி கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.