கடலூர்,ஆக.11- கடலூர் மாவட்ட தடகள கழகத்தின் சார்பில் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள விளையாட்டுப் போட்டிகள் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. காவல்துறை கண்காணிப்பாளர் பிரபு தொடங்கி வைத்தார். மாவட்ட தடகள கழகத்தின் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் அசோகன், மாநகராட்சி கவுன்சிலர் அருள் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இப் போட்டியில் முறையே 14, 16, 18, 20 வயதுக்குட்பட்ட 4 பிரிவுகளில் தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டி கள் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவி கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளையாடி னார்கள். போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். போட்டி யில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.