districts

ஜூலை 11 அதிமுக பொதுக்குழு செல்லும்

சென்னை,செப்.2- ஜூலை 11 அன்று எடப்பாடி பழனி சாமி கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் பொதுக்குழு குறித்த  தனிநீதிபதியின் உத்தரவை ரத்து  செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் செப்டம்பர் 2 வெள்ளியன்று தீர்ப்ப ளித்தது. இந்த தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டா ட்டத்தில் உள்ளனர்.ஓ.பன்னீர்செல் வம் ஆதரவாளர்கள் உற்சாகமிழந்து கவலையடைந்துள்ளனர். ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற  தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி மேல் முறையீட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.செப்டம்பர் 2  அன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப் பட்டது. அதில் எடப்பாடி பழனிசாமி ஜூலை 11 கூட்டிய பொதுக்குழு செல் லும் என்றும் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து என்றும் சென்னை உயர்நீதி மன்றம்  தீர்ப்பளித்துள்ளது.  தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனி சாமி தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை கூறுகையில், பெரும்பாலான பொதுக் குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு அதிமுக சட்ட விதிகளின் படி மட்டுமே இடைக்கால பொதுச் செயலாள ராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடு க்கப்பட்டார்.

எனவே ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லும். ஒற்றை தலைமையின் நோக்கம் மற்றும் முன் னேற்பாடுகள் அனைத்தும் ஏற்கப் பட்டுள்ளது; அதிமுக சட்டவிதிகளின் படி பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்ற வாதம் ஏற்கப்பட்டது என கூறி னார். தனி நீதிபதி உத்தரவு ரத்தான தால் இடைக்கால பொதுச்செய லாளர் பதவி செல்லும் என்ற நிலை  ஏற்பட்டிருக்கிறது. ஒருங்கிணைப் பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்படுகின்றன. இத னால் ஓ. பன்னீர்செல்வத்தை இடைக் கால பொதுச்செயலாளர் எடப்பாடி நீக்கியது செல்லும். எடப்பாடி பழனி சாமி உத்தரவின் பெயரில் பொரு ளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டது செல்லும். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எல்லோரும் நீக்கப் பட்டது செல்லும். பொதுக்குழு செல் லும் என்று நீதிமன்றம் அறிவித்ததால், தேர்தல் ஆணையம் இதை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேல்முறையீடு:ஓ.பி.எஸ் பேட்டி கடந்த சில தினங்களாக தனது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் தங்கி ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதர வாளர்களை சந்தித்தார். பின்னர் வெள் ளியன்று சென்னை புறப்பட்டார். முன்னதாக பெரியகுளம் தென் கரை அக்ரஹாரத் தெருவில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர் களிடம் அவர் கூறுகையில், உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.