திருப்பூர், ஏப். 6 - தேசிய ஒருமைப்பாட்டின் சிறந்த உதாரணமாக திருப்பூர் உள்ளது என்று திருப்பூரில் எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத் திறப்பு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வடமலை கூறினார். திருப்பூர் மாவட்ட ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியினர் மீதான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றம் சனியன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சிறப்பு நீதிமன்ற தொடக்க விழா வில் திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் வரவேற்றார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி யும், திருப்பூர் மாவட்ட பொறுப்பு நீதிபதியுமான மஞ்சுளா மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வடமலை ஆகியோர் பங்கேற்று சிறப்பு நீதிமன்றத்தைத் திறந்து வைத்தனர். இதில் நீதிபதி மஞ்சுளா பேசுகை யில், வந்தோரை வாழ வைக்கும் தொழில் நகரமான திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு தரப்பு மக்கள், புலம்பெயர் தொழிலாளர் கள் என ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இதன் முக்கியத்து வத்தை உணர்ந்து பல சிறப்பு நீதி மன்றங்கள் நிறுவப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இங்கு எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்க னவே திருப்பூர் மாவட்டத்தில் 39 நீதிமன்றங்கள் உள்ளன. இந்த சிறப்பு நீதிமன்றத்தையும் சேர்த்து 40 நீதிமன்றங்கள் தற்போது செயல்பட உள்ளன. அனைவருக் கும் சமநீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், வழக்குகளுக்கு விரைவான தீர்வு கிடைக்க வேண் டும் என்பதற்காகவும் நீதித்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. திருப்பூர் மாவட்டத் தில் காலியாக உள்ள நீதிமன்றங் களில் நீதிபதிகளை நியமிப்பதற் கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு, விரைவில் தீர்வு காணப்ப டும். திருப்பூர் மாவட்டத்தில் நீதி பதிகளும், வழக்கறிஞர் சங்கங்க ளும் ஒன்றிணைந்து சிறப்பாக நீதிமன்ற பணிகளை மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கது என் றார். சென்னை உயர்நீதிமன்ற நீதி பதி வடமலை பேசும்போது, திருப் பூர் மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பல்வேறு மக்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர். தேசிய ஒருமைபாட்டுக்கு சிறந்த உதாரணமாக திருப்பூர் மாவட்டம் விளங்குகிறது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு தேவை யான அனைத்து சட்ட உதவிகளும் சமமாகவும், சரியான நேரத்திலும் கிடைக்க வேண்டும். இந்த நோக் கத்தில் சிறப்பு நீதிமன்றம் தொடங் கப்பட்டது என்றார். திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர்கள் பழனிசாமி, ரகு பதி, சுப்புராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். எஸ்.சி. எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தின் மாவட்ட நீதி பதியாக பத்மா பொறுப்பேற்றார். இதில் அரசு வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். குற்றவியல் நீதித் துறை நடுவர் புகழேந்தி நன்றி தெரிவித்தார்.