கடலூர்,ஜூன் 9- கடலூர் திருப்பாதிரிப்புலியூர்-செம்மண்டலம் பகுதியை இணைக்கும் வகையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே கம்மியம்பேட்டையில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஓரத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாய் செல்கிறது. இந்த நிலையில் கூட்டுக்குடிநீர் குழாயில் ஞாயிற்று கிழமை காலை திடீரென உடைப்பு ஏற்பட்டு சுமார் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சிட்டு வெளி யேறியது. இதில் குடிநீர் அனைத்தும் ஆற்றில் கலந்து வீணாகி வருகிறது.இதன் காரணமாக செம்மண்டலம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றுவதில் தடைபட்டுள்ளது. மேலும் மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்வதிலும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.