சிதம்பரம், அக்.8- சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு முன்னணி தனியார் நிறு வனங்கள் கலந்து கொண்டு நேர்காணல் நடத்தி தகுதி யுள்ள 339 நபர்களைத் தேர்வு செய்தது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பணி நியமன ஆணையை வழங்கினார். கடலூர் மாவட்டத்திலி ருந்து 2030 பேர் கலந்து கொண்ட இந்த முகாமில் 106 தனியார் நிறுவன அதி காரிகள் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் சிதம்பரம் சாராட்சியர் (பொறுப்பு ) ரவி, மகளிர் திட்ட இயக்குநர் செந்தில் வடிவு, சிதம்பரம் வட்டாட்சியர் செல்வகுமார், சிதம்பரம் நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக் குமரன் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.