districts

img

ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை அட்டை

ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் முழுமையான வேலை வழங்கிட வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தபோராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஏ. வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ். பிரகாஷ், விவசாய சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.தட்சிணாமூர்த்தி, ஒன்றிய தலைவர் என்.அய்யாதுரை, ஒன்றிய பொருளாளர் பி. பாண்டியன் கலந்து பங்கேற்று பேசினர்.