சென்னை,ஆக.16-
பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் பழைய தங்க நகைகளை வாங்கி விற்கும் கடையில் ராமநாதபுரம் மாவட் டத்தைச் சேர்ந்த முகமது அப்துல் கலாம் அசாக் (38) என்பவர் வேலை பார்த்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவரை வேலையில் இருந்து நிறுத்திவிட்டதாக தெரி கிறது. இந்நிலையில் கடந்த 14-ந்தேதி முகமது அப்துல் கலாம் அசாக் நகைக்கடைக்கு வந்து அங்கிருந்த ஊழியர்களிடம் பேசினார். பின்னர் அவர் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து கடையின் மேலாளர் பார்த்தபோது கல்லாப் பெட்டியில் இருந்த ரூ. 9 லட்சம் காணாமல் போயி ருந்தது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்த போது அப்துல் கலாம் அசாக் பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.