சோழவரம் அடுத்த ஜனப்ப சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான்வர்கீஸ் மாணவர்களின் வருகைப் பதிவேடு, குடி தண்ணீர், சத்துணவு முட்டைகள் சரியாக வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார். பின்னர் 3-ம் வகுப்புக்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு மாவட்டஆட்சியர் ஆல்பி ஜான்வர்கீஸ் பாடம் நடத்தினார்.