districts

img

ஜன.6 தமிழ்நாடு மாநில சாம்பியன் கிரிக்கெட் தொடங்குகிறது

சென்னை, நவ.24- தமிழ்நாடு ஸ்டேட் சாம்பியன்ஷிப் (19வயது குட்பட்டோர்)  கிரிக்கெட் போட்டிகள் ஜனவரி 16ம் தேதி தொடங்க உள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய  தென்னிந்திய ஸ்கூல்ஸ் கிரிக்கெட் சங்கத்தின் தலை வர் ஜான் அமலன், பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் முதற்கட்டமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்க இருப்பதாக கூறினார்.  8 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட்போட்டியின் இறுதிப்போட்டி வெளிநாட்டில் நடைபெற உள்ளதாகவும்  அவர் தெரிவித்தார். 20 ஓவர் கொண்ட லீக் சுற்றில் வெற்றி பெறும் வீரர்களுக்கு மண்டலம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.  தமிழ்நாடு முழுவதும் கிரிக்கெட்டில் தகுதியும் ஆர்வமும் உள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து சிறப்பு பயிற்சி அளிக்க இருப்பதாகவும், அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களை தேர்ந்தெடுத்து எவ்வித கட்டணமும் இன்றி   பயிற்சி   அளிக்கப் போவதாகவும்  தமிழ்நாடு ஸ்கூல்ஸ் கிரிக்கெட் சம்மேளன பொதுச்செயலாளர் விக்னேஷ் மாஜினி  கூறினார்.  மாவட்டம் தோறும் குழு அமைத்திருப்பதாகவும், அக்குழு பரிந்துரைக்கும் வீரர்களைக் கொண்டு மாவட்டந்தோறும் கிரிக்கெட் அணிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் ஜான் அமலன் கூறினார்.  தமிழ்நாடு அரசின் உறுதுணையோடு இப்போட்டிகளை நடத்த இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.