பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிறன்று (மார்ச் 5) சென்னை டிபிஐ வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா. அந்தோணிசாமி தலைமையில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.
ஜிபிஎஸ் திட்டத்தை ரத்துசெய்தல், ஊதிய முரண்பாட்டை களைதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல், காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எம்.மேகநாதன் எம்.சீனிவாசன் சி.முகமது உசேன் ஆகியோர் தலைமையில் நடந்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வாசுகி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் ஞாயிறன்று (பிப் 5) திருவள்ளூரில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.மெல்கிராஜாசிங், ஷேக்கர், இராஜாஜி, முத்துகுமார், கணேசன், லோகையா ஆகியோர் தலைமை தாங்கினார். டிஏஎம்எஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் கு.தியாகராஜன், மாவட்ட நிர்வாகிகள் சா.ஞானசேகரன், எம்.ஜம்பு, எஸ். காந்திமதிநாதன், ஏ.மணிகண்டன், பிரசன்னா உட்பட்ட பலர் பேசினர்.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.