districts

முதலமைச்சர் பேச்சு... 3ஆம் பக்க தொடர்ச்சி

 நீதிமன்றப் படி ஏற வைத்தவர்தான் மோடி. மாநில உரிமைகள், கூட்டாட்சி பற்றி பேச மோடிக்கு தார்மீக உரிமை உள்ளதா? தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசுகிறது என்று மோடி ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்துள்ளார். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பாஜகவால் வளரவே முடியாது. மோடியின் வாயில்தான் பாஜக வளர்கிறதே தவிர, களத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால்தான் கூட்டணிக்கு, கட்சியில் ரவுடிகளையும், கலவரம் செய்யும் எக்ஸ்பெர்ட்-களையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போதும் மோடிதான் மக்களை ஏமாற்று வார். இப்போது அவரையே தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும் என யாரோ ஏமாற்று கிறார்கள். ‘வேண்டாம் மோடி’ என்று ஒட்டு மொத்த நாடும் உரக்கச் சொல்வதற்கான நாள் நெருங்கிவிட்டது. இன்னொருமுறை ஏமாந்தால், இந்தியா 200 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும். வரலாறுகள் திரித்து எழுதப்படும். அறிவியல் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பிற்போக்குக் கதைகள் புகுத்தப்படும். மக்களின் சிந்தனை மழுங்கடிக்கப்படும்; உரிமைகள் பறிக்கப்படும். சமூகநீதிக்கு சவக்குழி தோண்டப்படும். புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அரசியல்சட்டம் காற்றில் பறக்க விடப்பட்டு, ஆர்எஸ்எஸ் சட்டம் நாட்டை ஆளும். எனவே, தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக; பாழ்படுத்திய அதிமுக ஆகிய இரு வரையும் ஒருசேர வீழ்த்துவோம். பொதுக்கூட்டத்திற்கு திமுக காஞ்சி புரம் வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். காஞ்சி தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் வரவேற்றார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வபெருந்தகை எம்எல்ஏ, அமைச்சர் மா.சுப்பிரமணியன், தீர்மானக்குழு செயலாளர் மீ.அ.வைத்தியலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், சி.வி.எம்.பி. எழிலரசன், காரம்பாக்கம் க.கணபதி, ஜோசப் சாமுவேல், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு, மேயர்கள் மகாலட்சுமி (காஞ்சிபுரம்), க.வசந்தகுமாரி (தாம்பரம்), காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை மனோகரன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மமக துணைப்பொதுச் செயலாளர் யாகூப், சிபிஎம் திருபெரும்புதூர் தொகுதி பொறுப்பாளர் க.பீம்ராவ், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை),  சி.சங்கர் (காஞ்சிபுரம்) உள்ளிட்டு கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.