திருவண்ணாமலை,செப்.2. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட மக்களை காலி செய்ய சொல்லி மிரட்டுவதை கண்டித்து தண்டராம்பட்டு, ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது என்று வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் சங்கம் தீர்மானம் நிறை வேற்றியுள்ளனர். தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட குழுக் கூட்டம் மற்றும் கிளை பெயர் பலகை திறப்பு விழா பாலம் பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் கங்காதுரை பெயர் பலகையை திறந்து வைத்தார். சங்க கொடியை அகில இந்திய ஆதி வாசிகள் மேடையின் மத்தியக் குழு உறுப்பினர் ஏ.வி. சண்முகம் ஏற்றி வைத்தார். போளூர் வட்டம் முக்குரும்பை ஊராட்சி பாலம் பாக்கம் கிராமத்தில் ஏற்கெனவே இயங்கி வந்த பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் இடிக்கப் பட்டது. புதிய கட்டிடம் கட்டாமல், திறந்த வெளியில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை இயங்கி வரு கிறது. திறந்தவெளியில் பாடம் நடத்து வதை கைவிட்டு புதிய வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும். பாலம் பாக்கம் கிராமத்தில் மக்க ளுக்கு தனி ரேசன் கடை அமைத்து தர வேண்டும். முன்னாள் முதல மைச்சர் கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் கொடுத்த பட்டா, கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும், மக்கள் வாழும் இடத்தில் நெற்களம் அமைத்து தர வேண்டும், தண்டராம்பட்டு வட்டம், மேல் கரிப்பூர் கிராமத்தில் வசிக்கும் வேட்டைக்காரன் இனத்தை சேர்ந்த 150க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு கலைஞர் ஆட்சியில் வழங்கிய வீட்டுமனைப்பட்டாவை, கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யாமல், குடியிருப்புகளை காலி செய்ய மிரட்டும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தண்டராம்பட்டு மற்றும் ஆரணி வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்துவது என்றும் நிறை வேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், திருவண்ணா மலை மாவட்ட தலைவர்கள் எஸ்.சின்னையா,லட்சுமணன், கே.பாலு, என்.முருகன், எஸ்.முருகன், எம். மணி, சி.லட்சுமணன், சிபிஎம் வட்டச் செயலாளர் சி. ரமேஷ் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.