districts

img

கீழ்மின்னல் கிராமத்தில் 105 குடும்பங்களுக்கு பட்டா வழங்குக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

ராணிப்பேட்டை, செப். 11- ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், கீழ்மின்னல் மதுரா கன்னிகாபுரம் கிராமத்தில் உள்ள சர்வே  எண். 148  நிலத்தில் 50 வருடங்களுக்கு மேல், 105 குடும்பங்கள்  மூன்றாவது தலைமுறையாக வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.  இந்த வீடுகளுக்கு இலவசவீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி  வருகின்றனர். மேலும், அரசு அதிகாரிகள் கேட்ட ஆவணங்கள் அனைத்தையும் வழங்கியுள்ளனர். இதற்கான  கோப்புகள் காணவில்லை என்று 1996 ஆம் ஆண்டில் இருந்து தேடி வருவதாக வருவாய்த்துறையினர் காலம் கடத்தி வருகின்றனர்.   இந்த நிலையில், தடையாக உள்ள கோப்புகளை தேடி விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட  வருவாய் அலுவலரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கிளைத் தலைவர் எம். தனபால் தலைமையில் விவசாயிகள் குடும்பங்கள் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது கிளைச் செயலாளர் எம். ரமேஷ் உடனிருந்தார்.