கள்ளக்குறிச்சி, மார்ச். 7 - உளுந்தூர்பேட்டை மற்றும் திருநாவலூர் ஒன்றி யங்களில் பட்டா கேட்டு சிபிஎம் நடத்திய போராட்டத் தின் விளைவாக புதனன்று (மார்ச்7) 401 பயனாளி களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. உளுந்தூர்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே. மணிக் கண்ணன் முன்னிலையில் இந்த பட்டாக்களை அதிகாரி கள் வழங்கினர். இதில் பரமேஸ்வரி மங்கலம் பூம்பூம் மாட்டுக்காரர் களுக்கு 14 பட்டாக்கள், டீ.ஒரத்தூர் ஆதிதிராவிடர் மக்களுக்கு 31 பட்டாக்கள் உட்பட 401பேருக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆக 27 அன்று பரமேஸ்வரி மங்கலம் பூம்பூம் மாட்டுக் காரர் மக்களுக்காக ஒன்றிய செயலாளர் வி.ரகுராமன் தலைமையிலும் டிச.2 அன்று டீ.ஒரத்தூர் ஆதிதிராவிட மக்களுக்காக ஒன்றிய செயலாளர் டி.எஸ்.மோகன் தலைமையிலும் பட்டா கேட்டு சிபிஎம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி போராட்டத் திற்கு கிடைத்த வெற்றி என பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.