சென்னை, மே 13 சென்னை தேனாம் பேட்டையில் செயல்பட்டு வரும் பொது சுகாதார துறையின் கொரோனா ஆய்வகத்திற்கு ஐஎஸ்ஓ தரச் சான்று கிடைத்துள்ளது. சென்னை தேனாம் பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் தமிழக அரசின் பொது சுகாதாரத்துறைக்கு சொந்தமான மாநில பொது சுகாதார ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனா சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்யப்படுகிறது. இந்த ஆய்வகத்தில் தினசரி 8,000 கொரோனா சோதனைகள் செய்ய முடியும். தற்போது வரை இந்த ஆய்வகத்தில் 26.57 லட்சம் சோதனைகள் செய்ய ப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆய்வ கத்திற்கு ஐஎஸ்ஓ தரச்சான்று கிடைத்து ள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள் ளார். இதன்படி தமிழ்நாட்டில் ஐஎஸ்ஓ 15189:2021 தரச் சான்று பெற்ற முதல் ஆய்வகம் என்ற பெருமை இந்த ஆய்வகத்திற்கு கிடைத்துள்ளது.