சிதம்பரம், ஜூலை 22-
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி பெண்கள் 2 பேரை நிர்வாணமாக்கி ஊர்வ லமாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் செய்த சம்ப வத்தை கண்டித்து சிதம்ப ரம் அருகே உள்ள கிள்ளை யில் கிராமத்தில் இரு ளர் இன மக்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். அந்த சமூ கத்தைச் சார்ந்த கிள்ளை பேரூராட்சி மன்றத் தலை வர் மல்லிகா தலைமை தாங்கினார். கிள்ளை பேரூ ராட்சி மன்ற துணைத் தலை வர் கிள்ளை ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.
கிள்ளை கடைத்தெரு வில் புறப்பட்ட ஊர்வலத்தில் கிள்ளை, தளபதி நகர், எம்ஜிஆர் நகர், சிசில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் இருளர் இன மக்கள், மோடி அரசை கண்டிக்கும் வகையில் 1000 மேற்பட்டோர் ஒரு நாள் வேலைகளுக்கு செல்லாமல் கலந்து கொண்டனர். மேலும், தங்க ளது குடிசைகளில் கறுப்பு கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தனர்.