districts

img

நகர்புற அலுவலக பயன்பாட்டிற்கான டிரெஸார் இ-சைக்கிள் அறிமுகம்

சென்னை, ஜன.5 நகர்ப்புறங்களில் அலுவலகத்திற்கு சென்று வரவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும்  “டிரெஸார்’’ என்ற பெயரில்  மின்சாரத்தில் இயங்கும் சைக்கிள் சென்னையில் அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது.  இந்திய சாலைகளுக்கும்,  பருவநிலைகளுக்கும் சிறப்பாக  பொருந்தும் வகையில் இந்த சைக்கிள் வடிவமைக்கப் பட்டுள்ளது.  ஐந்து நிலைகளில் பெடல் உதவி மற்றும் ஒரு த்ராட்டில் ஆப்ஷனோடு ஒரு சார்ஜிற்கு 80 கி.மீ வரை  இதன் மூலம் பயணிக்கலாம் என்று இதனை வடிவமைத்துள்ள வோல்ட்ரிக்ஸ் மொபிலிட்டியின் நிறுவனரும், தலைமைச் செயல் அலுவலருமான  விவேக் ஆ பழனிவாசன் கூறி னார். வெறும் ரூ. 999 செலுத்தி டிரெஸார் இ-சைக்கிள் முன்பதிவு  செய்யலாம்.  ஜனவரி 3ம் வாரத்திலிருந்து இதன் விநியோகம்  தொடங்கும் என்று அவர்  கூறினார்.  உடல் உழைப்பற்ற சோம்பலான வாழ்க்கைமுறை, நீரிழிவு மற்றும் உடற்பருமன் நோய்களில் இருந்து விடுபட சைக்கிள் பயணம் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.