districts

புதிய ஓய்வூதியநிதி அறிமுகம்

சென்னை, செப்.1- யூனியன் வங்கியின் யூனியன் ஏஎம்சி புதிய ஓய்வூதிய நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 5 ஆண்டுகள் அல்லது ஓய்வு பெறும் வயது வரை (எது முந்தையதோ) லாக்-இன் கொண்ட ஒரு திறந்தநிலை ஓய்வூதிய தீர்வு சார்ந்த திட்டமாகும். யூனியன் ரிடையர்மென்ட் ஃபண்ட் (திட்டம்)  திட்டத்தில்  செப். 1 ஆம் தேதி முதல் செப். 15 ஆம் தேதி வரை சேரலாம்.  குறைந்தபட்ச முதலீடு ரூ. 1,000 ஆகும்.  நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது பணிகளை மாற்றிக்கொள்கிறார்கள். மேலும் சிலர் தற்காலிக வேலைகளுக்காகவும், பொருளாதார நோக்கத்திற்காகவும் முற்றிலுமாக பணிகளை கைவிடுகிறார்கள்.  நாட்டில் சாராசரி ஆயுட் காலம் 70 ஆண்டுகளாக மாறியுள்ளதால் ஓய்வுக்குப் பிந்தைய ஆண்டுகளில் சுதந்திரமாக செயல்பட திட்டமிடல் தேவை என்று யூனியன் ஏஎம்சி   தலைமை நிர்வாக அதிகாரி, ஜி. பிரதீப்குமார் கூறியுள்ளார்.