districts

img

மதுரை, திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர்கள் அறிமுகம்

சு.வெங்கடேசன்

மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டி யிடும் சு. வெங்கடேசன் (வயது 54) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஆவார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் நிலையில், மீண்டும் மதுரை மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டி யிடுகிறார்.

33 ஆண்டுகளாக முழுநேர ஊழியர்

சு. வெங்கடேசன், கடந்த 34 ஆண்டுகளாக கட்சி உறுப்பினராகவும், 33  ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராகவும் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், மாநில தலைவராகவும் பணியாற்றியவர். தற்போது சங்கத்தின் மதிப்புறு தலைவராக பணியாற்றி வருகிறார்.

காவல் கோட்டம் நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது

2011-ஆம் ஆண்டு சு. வெங்கடேசன் எழுதிய முதல் நாவலான “காவல் கோட்டம்” நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. நான்கு கவிதை தொகுப்புகள், கலாச்சாரத்தின் அரசியல், ஆட்சித் தமிழ் - ஒரு வரலாற்றுப் பார்வை, வைகை நதி நாகரீகம், சமயம் கடந்த தமிழ், கதைக ளின் கதை உட்பட 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ‘ஆனந்த விகடன்’ வார இதழில் 119 வாரம் வெளியான “வீரயுக நாயகன் வேள்பாரி” நாவல் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அரவான் திரைப் படத்தின் கதாசிரியர் ஆவார்.

பண்பாட்டு இயக்கங்களில் முக்கியப் பங்கு வகிப்பவர்

தமிழரின் தொல்நாகரீகத்தின் சான்றான கீழடி அகழாய்வினை உலக றியச் செய்வதில் முதன்மை பங்கு வகித்தவர். தமிழ் செம்மொழி தகுதி பெற பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு இயக்கங்களில் முக்கிய பங்களிப்பை செய்தவர். தமிழ்மொழி தொடர்பான தேசிய, சர்வதேசிய கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். கட்சி நடத்திய பல்வேறு மக்கள் போராட்டங்களிலும், இயக்கங்களிலும் முக்கிய பங்கு வகிப்பவர். மதுரை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினராக கடந்த 5 ஆண்டு காலம் மதுரை மாவட்ட மக்களின் நலன்களுக்காகவும், தமிழ கத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழ் மொழி உரிமைக்காகவும் நாடாளுமன்றத் தில் குரலெழுப்பியவர். தாம் எழுப்பிய பல்வேறு பிரச்சனைகளில் வெற்றி கண்டவர்.

விடாப்பிடியான போராட்டத்தால் மக்களின் மதிப்பை பெற்றவர்

மொழித் திணிப்பு எதிர்ப்பு, தாய்மொழி உரிமை, தமிழ்நாட்டு இளை ஞர்களின் வேலைவாய்ப்பு, இந்தியாவிலேயே போட்டித்தேர்வு மாண வர்களுக்கான தனித்த பூங்கா அமைத்தது, ரயில்வே சார்ந்த கோரிக்கை கள், கோவிட் பேரிடர் காலத்தில் ‘அன்னவாசல்’ உள்ளிட்ட முன்னுதாரண மான பணிகள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் நைபர் ஆராய்ச்சி மையத்திற்கு தொடர் போராட்டம், மதுரை விமான நிலைய விரிவாக்கம், ரயில் போக்குவரத்து, மதுரை மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள், மதுரை தொழில் வளர்ச்சிக்கான தலையீடுகள், ரூ. 500 கோடி அளவில் ஏழை - எளிய மாணவர்களுக்கு கல்விக் கடன் பெற்றுத்தந்தது, மாற்றுத் திறனாளிக ளுக்கு முகாம்கள் நடத்தி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு உதவி செய்தது, ஐ.ஐ.டி. உள்ளிட்ட நிறுவனங்களில் சமூக நீதிக்காக குரல் எழுப்பியது என ஒவ்வொரு துறையிலும் நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் விடாப்பிடியான போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பவர். கல்வி, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டு மக்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு கடந்த ஐந்தாண்டு காலத்தில் அயராது பணியாற்றி தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தவர். தமிழகம் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களை பெற்று வருபவர். மதுரை, திருப்பரங்குன்றத்தைச் சார்ந்தவர். மனைவி பி.ஆர். கமலா. இவர்களுக்கு யாழினி, தமிழினி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

 

ஆர்.சச்சிதானந்தம்

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் களம் காணும் தோழர் ஆர்.சச்சிதா னந்தம் (வயது 53) மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினர் மற்றும் திண்டுக்கல் மாவட்டச் செயலாளராக பணியாற்றி வருபவர் ஆவார்.  பி.எஸ்.சி. பட்டதாரியாவார். 37 ஆண்டுகளாக கட்சியில் உறுப்பினராகவும், 30 ஆண்டுக ளாக கட்சியின் முழுநேர ஊழியராகவும் பணியாற்றி வருகிறார்.

மாணவ, வாலிபர், விவசாயிகள் தலைவர்

1987-ஆம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தில் மாவட்டத் துணைச் செயலாளராகவும், திண்டுக்கல் நகரத் தலைவராகவும் பணியாற்றியவர். 1992ம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணைந்து 1994-2002 வரை மாவட்டச் செயலாளராக, மாநில செயற்குழு உறுப்பினராக, மாநில துணை செயலாளராக பணியாற்றியுள்ளார். 2004-2007 வரை ஆத்தூர், ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்கள் இணைந்த கட்சியின் திண்டுக்கல் தாலுகா செயலாளராகவும், அதன்பின்பு ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 2007-2018 வரை தமிழ்நாடு விவசாய சங்கத்தில் மாவட்டச் செயலாளர், மாநில துணை செயலாளர் மற்றும் அகில இந்திய கிசான் கவுன்சில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

26 வயதில் துவங்கி 2 முறை ஊராட்சி மன்றத் தலைவர்

26 வயதில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சிமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு 1996-2006 வரை இரண்டு முறை மக்கள் பிரதிநிதியாக சிறப்பாக பணியாற்றியுள்ளார். 2018-ஆம் ஆண்டு முதல் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார். ஊராட்சி மன்றத்தில் எவ்வித லஞ்ச, ஊழலற்ற, நேர்மை யான நிர்வாகத்தை நடத்தியவர். கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகள் நடத்திய போராட்டங்களில் பங்கேற்று கைதாகி யுள்ளார்.

இரத்ததானக் கழகம் மூலம் 32 முறை இரத்ததானம் 

திண்டுக்கல் மாவட்டத்தில் இரத்ததானக் கழகத்தை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தி இதுவரை 32 முறை இரத்ததானம் செய்துள்ளார். விவசாயிகள் சங்கத்தில் பணியாற்றிய காலத்தில் பழனி வட்டத்தில் உபரி நில மீட்பு போராட்டத்தை நடத்தி ஆக்கிர மிப்பாளர்களிடம் இருந்த நிலத்தை மீட்டு ஏழை விவசாயிகளுக்கு கொடுக்கும் போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்தியவர்.

பழங்குடியினருக்காக போராட்டம்

கூடலூர், லந்தக்கோட்டை, கருங்கல் கிராமங்களில் உள்ள விவசாய விளை நிலங்களிலிருந்து சிப்காட்டிற்கு நிலம் எடுப்பதை தடுத்து நிறுத்துவதற்கு கட்சியின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி அத்திட்டத்தை கைவிட செய்து விவசாய விளை நிலங்களை பாதுகாத்தவர். புலையன் இனத்தை மீண்டும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கொடைக்கானல் துவங்கி சென்னை வரை அம்மக்களை திரட்டி போராட்டம் நடத்தியவர். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் காமாட்சி புரம் கிராமம் கட்டச்சின்னாம்பட்டியைச் சேர்ந்தவர். இவருக்கு எஸ். கவிதா என்ற மனைவியும், ஆர்.எஸ். வைசாலி (திருமணமானவர்), ஆர்.எஸ். மிருணாளினி (பத்தாம் வகுப்பு மாணவி) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.