சென்னை, நவ.3- வேகமான வாழ்க்கை முறைகள், மாறிவரும் உணவுப் பழக்கம் மற்றும் அதிகரித்து வரும் மன அழுத்த அளவுகள் ஆகி யவை வயிற்றில் புளித்த ஏப்பத்தை ஏற்படுத்து கின்றன. இத்தகைய பாதிப்பு தற்போது உலகில் பெரும் பிரச்சனையாக மாறி யுள்ளது. இந்த நிலையின் சுமை உலகளவில் மட்டு மல்ல, இந்தியாவிலும் உணரப்படுகிறது. எனவே உடலை புளித்த ஏப்பத் திற்கு எதிராக தயார்படுத் தும் வகையில் ஆரோக்கி யம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் உலகளாவிய முன்னணி நிறுவனமான ரெக்கிட், அதன் கேவிஸ் கான் பிராண்டின் கீழ், தமிழ்நாட்டில் கேவிஸ்கான் டபுள் ஆக்ஷன் என்ற பெயரில் புளித்த ஏப்பத்தை எதிர்கொள்ளும் மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை கேவிஸ்கான் சந்தையிடல் மேலாளர் எட்வர்ட் தாமஸ் மற்றும் ரெக்கிட் இந்தியா பிராண்ட் மேலாளர் மனவ் சோஹல் ஆகியோர் அறிமுகப் படுத்திப் பேசினர். முன்ன தாக அதிகரித்து வரும் புளித்த ஏப்பம் குறித்து பேராசிரியர் டாக்டர். பீட்டர் கஹ்ரிலாஸ் (கில்பர்ட் ஹெச். மார்க்வார்ட், மருத்து வப் பேராசிரியர்), பேராசிரியர் டாக்டர். பாலி `ஹூ`ங்கின், எமரிட்டஸ் ஆகியோருடன் ஒரு குழு விவாதம் நடைபெற்றது.