districts

சர்வதேச அலைச்சறுக்கு போட்டி

சென்னை,ஆக.13-

     யுனெஸ்கோ பாரம்பரிய நகரான மாமல்லபுரத்தில் முதல் முறையாக சர்வதேச அலைச்சறுக்கு போட்டி நடைபெற உள்ளது. இன்று முதல் 20ம் தேதி வரை போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் 11 நாடுகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிக்கான துவக்க விழா கோவளத்தில் ஞாயிறன்று  நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்தார்.