districts

img

வடபழனி எஸ்ஆர்எம் வளாகத்தில் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு

சென்னை,ஏப்.28- வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி வளாகத்தில்  ஐஓடி, கிளவுட் & டேட்டா சயின்ஸ் தொடர்பான சர்வ தேச ஆராய்ச்சி மாநாடு வெள்ளியன்று  (ஏப்,28) நடைபெற்றது. எச்சிஎல் டெக்னாலாஜி  இந்தியா & அமெரிக்கா சர்வ தேச திட்ட இயக்குநர்  ரமேஷ்  சேதுராமன் தலைமை விருந் தினராக கலந்து கொண்டார். காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் துணைத் தலைவர் சரவணன் பழனி சாமி பேசுகையில், புது மைக்கு வழிவகுக்கும் வாழ்க்கையை மேம்படுத்து வதே தொழில்நுட்பத்தின் அடிப்படைக் குறிக்கோள் என்றார். கற்றல் என்பது உயிருடன் இருப்பதற்கு இன்றியமையாதது என்றும்   அவர் கூறினார்.  வரவிருக் கும் ஆண்டுகளில் ரோபோடி க்ஸ் மற்றும் AI ஐச் சேர்க்கும்  யோசனையை ரமேஷ் சேதுராமன் பாராட்டினார்.  தொடக்க விழாவைத் தொடர்ந்து, கிளவுட், மெஷின் லேர்னிங், நேச்சு ரல் லாங்குவேஜ் ப்ராசஸிங்,  ஐஓடி போன்ற பல்வேறு  தலைப்புகளில் சிந்தனை யைத் தூண்டும் அமர்வுகள் நடைபெற்றன. மாநாட்டில் “சுருக்கங்கள்” என்ற புத்த கத்தின் முதல் பிரதியை  ரமேஷ் சேதுராமன் வெளி யிட, சரவணன் பழனிசாமி.  டாக்டர். ராஜ் ராமச்சந்திரன்  ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.  மாநாட்டு அமைப்புச் செயலாளர் டாக்டர். ஜி. பாவை ஆனந்த், கன்வீனர்  டாக்டர் எஸ். பிரசன்னா தேவி, துணைமுதல்வர் டாக்டர் சி. கோமதி உள்ளிட் டோர் இதில் கலந்து கொண்டனர்.