districts

92 வயது முதியவருக்கு தீவிர அறுவைசிகிச்சையற்ற பேஸ்மேக்கர்

சென்னை, மார்ச் 9- சென்னையில் முதன்முறையாக தீவிர அறுவைசிகிச்சையற்ற பேஸ்மேக்கர் 92 வயது முதியவருக்கு சென்னையில் உள்ள போர்டிஸ் மலர் மருத்துவமனையில் பொறுத் தப்பட்டது.  டாக்டர் பாபு ஏழுமலை தலைமை யிலான இதயப் பிரிவு மருத்துவர் குழு, முதன்முறையாக இரட்டை அறை பேஸ் மேக்கரை அறுவைசிகிச்சை இல்லாமல் வெற்றிகரமாகப் பொறுத்தியுள்ளனர். சென்னையில் முதன்முறையாக இத்தகைய சிகிச்சை, இரண்டு நோயாளர்களுக்குச் செய்யப்பட்டது. சரியான நேரத்தில் மருத்து வர்கள் இந்த சிகிச்சையை மேற்கொண்டதால் 60 வயது மற்றும் 92 வயது நபர்கள் காப்பாற் றப்பட்டுள்ளனர். இதயப் பிரச்சனைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள், கோவிட் நிமோனியா, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பிற இணை நோய்களுடன் அவதிப் பட்டு, டயாலிசிஸிலும் இருந்தனர். , 92 வயது முதியவருக்கு இதயம் முழுமை யாக அடைபட்டு நிமிடத்துக்கு 33 இதயத்து டிப்பை மட்டுமே கொண்டிருந்தார்.  அவருக்கு கம்பியற்ற பேஸ்மேக்கர் பொறுத்தும் சிகிச்சை முடிந்து 24 மணி நேரத்தில் வீடு திரும்பி, தன் அன்றாட வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டார்.