சென்னை, டிச. 26 - காப்பீடு பாலிசி மீதான 18 விழுக்காடு ஜிஎஸ்டி-யை ரத்து செய்ய வேண்டுமென்று காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் வலி யறுத்தி உள்ளது. காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சென்னை பகுதி-1ன் 64ஆவது மாநாடு ஞாயிறன்று (டிச.26) பாரத் இன்சூரன்ஸ் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், எல்ஐசி பங்கு விற்பனைக்கான ஐபிஓ நடவடிக்கை, பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை விற்கும் முயற்சி ஆகியவற்றை கைவிட வேண்டும், தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களை திரும்ப பெற வேண்டும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவதற்கான சட்டம் கொண்டு வர வேண்டும்,
நாடாளுமன்றம், சட்ட மன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22, 23 தேதிகளில் நடை பெறும் வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் பகுதி தலைவர் ஜி.ஜெய ராமன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தலைவர்களின் படத்தை மூத்த தலைவர் எஸ்.ராஜப்பா திறந்து வைத்தார். எஸ்.ரவிக்குமார வரவேற்றார். ஆண்டறிக்கையை செயலாளர் எஸ்.ரமேஷ்குமாரும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் கே.ஸ்ரீதரும் சமர்பித்தனர். தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.செந்தில் குமார், பொருளாளர் எஸ்.சிவசுப்பிர மணியம், துணைததலைவர் கே.சுவாமி நாதன், கவுரவ உறுப்பினர்கள் எல்.பழனி யப்பன், கே.டேவிட் உள்ளிட்டோர் பேசினர். இணைச் செயலாளர் டி.ரமேஷ் நன்றி கூறினார். நிர்வாகிகள்: தலைவராக ஜி.ஜெயராமன், பொதுச் செயலாளராக எஸ்.ரமேஷ்குமார், பொருளாளராக டி.ரமேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.