districts

img

கள்ளக்குறிச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்க அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி, செப்.16-  கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்க அறி வுறுத்தினார். கள்ளக்குறிச்சி அருகே சிறு வங்கூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, “தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.  அதன் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக தனி வார்டுகள் அமைத்திட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.  மேலும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.  கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி யில் நடைபெற்று வரும் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையையும் ஆட்சியர் பார்வையிட்டார். பின்னர், மாணவர்களுக்கு சேர்க்கைக்கான ஆணை களையும் வழங்கினர்.  இந்த ஆய்வின்போது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷா, மருத்துவ கண்காணிப்பாளர் நேரு, இணை பேராசிரியர் பொற்செல்வி, சமீம் பேராசிரியர் தீபா மற்றும் அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.