சென்னை, அக். 27- திருவொற்றியூர் 4ஆவது வார்டில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்ட மைப்பின் செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ஆர்.ஜெயராமன் மெட்ரோ இயக்குநரை சந்தித்து அண்மையில் மனு அளித்தார். இதையடுத்து தற்போது திருவீதியம்மன் நகர் கழிவு நீர் சேகரிப்பு பம்பிங் நிலை யத்தில் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனை தீர்க்க நெய்தல் நகர் மேல்நிலை தொட்டியில் இருந்து எர்ணாவூருக்கு புதிதாக இனைப்பு வழங்கும் பணிகளை செயற்பொறி யாளர் கலைச்செல்வன், மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் உள்ளிட்ட அதி காரிகள் ஆய்வு செய்தனர். சோதனை ஓட்டமும் நடை பெற்றது. இன்னும் ஒரு வாரத்திற்குள் குடிநீர் வழங்கப்படும் என்று அதி காரிகள் தெரிவித்தனர். வி.பி. நகர், டி.கே.பி. நகர், ஜெயலலிதா நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.வாரிய நிதியிலேயே பணி மேற்கொள்ளப் படும் என்று நிர்வாக இயக்குநர் அப்போது தெரிவித்திருந்தார். அதை யொட்டி தற்போது பணி களை மேற்கொள்ள நட வடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.