districts

img

லாக்கப் மரண வழக்கு விசாரணை: குற்றவாளி காவல் ஆய்வாளரை இடம் மாற்ற வலியுறுத்தல்

கடலூர்,ஜன.31- சுப்பிரமணி லாக்கப் மரண வழக்கு வியாழனன்று (பிப். 1) முதல் விசாரணைக்கு வர உள்ள நிலையில் முதல் குற்றவாளியான ஆய்வாளர் ராஜாவை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று சிபிஎம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சுப்பிரமணியன் மனைவி ரேவதி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் விழுப்புரம் டிஐஜி மற்றும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர். அதன் விவரம் வருமாறு:- நெய்வேலி நகர காவல் நிலை யத்தில் மரணம் அடைந்த சுப்பிர மணி வழக்கு உயர்நீதிமன்றம்  இரண்டு மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்டதன் அடிப்படையில் கடலூர் எஸ்சி மற்றும் எஸ்டி நீதி மன்றத்தில் ஏப். 1 அன்று தொடங்கப் படும் விசாரணை மார்ச் 5 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் முதல் குற்ற வாளியாக உள்ள ராஜா, கடலூர் மாவட்டம், வடலூர் காவல் நிலை யத்தில் ஆய்வாளராக பணி புரிந்து வருகிறார். இரண்டா வது குற்றவாளியாக உள்ள செந்தில்வேல் காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.  மூன்றாவது குற்றவாளி சோமையின் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த மூன்று எதிரிகளும் தமிழ்நாடு காவல்துறையிலேயே பணிபுரிந்து வருகின்றனர். ராஜா வடலூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிவதால் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் சுதந்திரமாக சாட்சி அளிக்க இயலாது. எனவே, சட்டத்தின் நலனை கருதி முதல் குற்றவாளி வடலூர் காவல் நிலை யத்திலிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், வி.சுப்பராயன், நெல்லிக்குப்பம் பகுதி செயலாளர் ஜெய பாண்டியன், வழக்கறிஞர்கள் ஜோதிலிங்கம், லெனின் ஆகியோர் உடனிருந்தனர்.