districts

img

கர்ப்பிணி மரணம் குறித்து விசாரணை: சிபிஎம் தலைவர்களிடம் ஆணையர் உறுதி

  சென்னை,ஏப்.17- புளியந்தோப்பு மாநகராட்சி மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணி  மரணம் குறித்து கூடுதல்  ஆணையர் தலைமையில் குழு அமைத்து விசாரணைக்கு உத்தர விடுவதாக மார்க்சிஸ்ட் கட்சி தலை வர்களிடம் மாநகர ஆணையர் உறுதி அளித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி, 77வது வட்டம், எழும்பூர் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட கே.பி.பார்க் குடியிருப்பை சேர்ந்த ம.கோட்டீஸ்வரன் மனைவி ஜனக வள்ளி (28) ஏப்.6 அன்று  காலை  சுமார் 10.30 மணிக்கு பிரசவத்திற் காக புளியந்தோப்பு திருவேங்கட சாமி தெருவிலுள்ள சமுதாய நல  மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். சமுதாய நல மருத்துவமனை யில் உரிய மருத்துவர்கள் இல்லாத தாலும், முறையான சிகிச்சை அளிக்காத காரணத்தினாலும், ஜனக வள்ளி மரணமடைந்தார். ஆனால், அவர் இறந்த செய்தியை மறைத்து ஆம்புலன்ஸ் மூலம் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கே மருத்துவமனை நிர்வாகம், ஜனக வள்ளி ஏற்கனவே இறந்து விட்டதாக  தெரிவித்துள்ளனர். அதிர்ச்சிய டைந்த ஜனகவள்ளியின் உறவினர்க ளும், கே.பி.பார்க் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அப்பகுதிக்கு வருகை தந்த புளியந்தோப்பு காவல் துணை ஆணையாளர்  “ஜனகவள்ளிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை யான சிகிச்சையா? என விசாரணை செய்து சம்மந்தப்பட்ட மருத்துவர் மற்றும் செவிலியர் மீது உரிய சட்ட  நடவடிக்கையினை தொடர மருத்து வக்குழு அமைத்து விசாரணை அறிக்கை அளிக்க” மருத்துவக் கல்வி இயக்குநர்  பரிந்துரை செய்தார். உரிய மருத்துவ சிசிச்சை கிடைக்காமல் இறந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஜனகவள்ளி பி.எஸ்.சி (டிஎம்எல்டி) பட்டதாரி ஆவார்.

அவருக்கு மூன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அவரது கணவர் ஆட்டோ ஓட்டுநர். இத்தகைய நிலைமையை கவனத்தில் எடுத்துக் கொண்டு, உயிரிழந்த ஜனகவள்ளி குடும்பத்தினருக்கு அரசு உரிய  இழப்பீடும், கருணை அடிப்படை யில் அவரது கணவருக்கு அரசு  வேலையும் வழங்கக் கோரியும்  பெருநகர சென்னை  மாநகராட்சி யின் ஆணையரை திங்களன்று (ஏப்.17) மத்திய சென்னை மாவட்டச்  செயலாளர் ஜி.செல்வா, 98 வது  வட்ட கவுன்சிலர் ஆ. பிரியதர்ஷினி, எழும்பூர் பகுதி செயலாளர் க.முரு கன், பகுதிக்குழு உறுப்பினர் த.சித்தார்த்தன், மரணமடைந்த பெண்ணின் கணவர் கோட்டீஸ்வ ரன் ஆகியோர் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆணையர், “கூடுதல் ஆணையர் தலைமையில் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிடுவதாக உறுதியளித்தார். விசாரணை முடிவின் அடிப்படையில் அடுத்த  கட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக வும் தெரிவித்தார்.