திருவள்ளூர்.ஏப், 4- மோடி ஆட்சியில் சுதந்திரமும், ஜனநாயகமும் மட்டுமல்ல தொழிலும், விவசாயமும் வர்த்தகமும் செத்து போய்விட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அ.சவுந்தரராசன் தெரிவித்தார். காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதனன்று (ஏப் 3), மீஞ்சூரில் பிரச்சாரக் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: மோடி ஆட்சியில் எந்த தொழிலும் நடைபெறவில்லை. கடந்த 10 ஆண்டு கால ஆட்சியின் போது அறி வித்த திட்டங்கள் எதுவும் நடைபெற வில்லை. இதனால் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கிறது மோடி அரசு. வட மாநிலங்களில் கூட பாஜக-வால் வெற்றி பெற முடியாது. 200 தொகுதி கள் கூட கிடைக்காது என இப்போது வரும் தகவல்கள்தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக மோடியின் பேச்சிக்கும், உண்மைக்கும் எந்த சம்பந்தம் கிடையாது. மோடி சொன்ன வாக்குறுதிகள் அத்தனையும் பொய்யாக உள்ளது. உலகத்திலேயே அதிக இளைஞர்கள் இருக்கிற நாடு இந்தியா தான். இந்தியாவில் படித்த இளை ஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் பேர் வெளி வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கான வேலை வாய்ப்பு இல்லை. மோடி கொண்டு வருவதாக சொல்லும் எந்த தொழிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவில்லை. படித்தவர்களுக்கு இருக்கிற வேலையின்மையை விட, படிக்காதவர்கள் மத்தியில் 10 மடங்கு வேலையின்மை இருக்கிறது எனவும் உலக தொழிலாளர் ஸ்தாபன அறிக்கை சொல்லுகிறது. திருப்பூர் காலியாகிறது தமிழ்நாட்டின் சிறந்த தொழில் நகரமான திருப்பூர், ஏற்றுமதி மூலமாக கிட்டத்தட்ட ரூ.ஆயிரத்து 500 கோடி அளவிற்கு அந்நிய செலா வணி ஈட்டித் தருகிறது. திருப்பூ ரில் வேலைக்கு ஆட்கள் தேவை என போர்டு எப்போதும் தொங்கிக் கொண்டே இருக்கும். அந்தத் திருப்பூரில் இன்றைக்கு ஆயிரக்கணக்கான தொழிற் சாலைகள் மூடப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளனர். இதற்கு யார் காரணம். முதலமைச்சர் ஸ்டாலின் காரணமா?, மோடி ஆட்சியின் தவறான பஞ்சு, பருத்திக் கொள்கை களும், தவறான ஜவுளி ஏற்றுமதி கொள்கையுமேயாகும். எந்த திருப்பூர் முதலாளிகள் மோடியை ஆதரித்தார்களோ, அதே திருப்பூர் முதலாளிகள் இன்றைக்கு எதிர்த்து நிற்கிறார்கள். இந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரி விக்கிறார்கள். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரவேகூடாது, மார்வாடி தொழிலையே அழித்துவிட்டது என்கிறார்கள். ஜவுளி, எலக்ட்ரானிக், எலக்ட்ரிகல், விவசாயம் என ஒட்டுமொத்த தொழிலையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி அனைத்து துறைகளையும் அழித்து ஒழித்துக் கொண்டு வரும் பாஜக மோடி அரசாங்கத்தை அகற்ற, திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என சவுந்தரராசன் கேட்டுக் கொண்டார். கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் இ.ஜெயவேல் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் துரை.சந்திரசேகர் எம்எல்ஏ, திமுக பேரூராட்சி செயலாளர் தமிழ்உதயன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், கே.விஜயன், ஏ.ஜி.சந்தானம், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.கதிர்வேல், டி.மதன், ஒன்றிய குழு உறுப்பினர் என்.ரமேஷ்குமார், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் ஜி.வினாயகமூர்த்தி, சிசிலியா, விசிக மண்டல துணை செயலாளர் சிவராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் எம்.அபுபக்கர் எம்சி, தொமுச மின் ஊழியர்கள் சம்மேளனத்தின் மாநில தலைவர் சசிகுமார், திமுக மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் ரவி , பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் ஆகியோர் பேசினர்.