‘சாதி, மதம், பாலினம், வர்க்கம் கடந்து காதலிப்போம்; ஊக்குவிப்போம்’ என்ற முழக்கத்தோடு மாநில கல்லூரி மற்றும் சென்னை பல்கலைக் கழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் காதலர் தினத்தை கொண்டாடினர். இதில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் மிருதுளா, தலைவர் அருண், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ரா.பாரதி, தலைவர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.