மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டும், சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியை அரசே எடுத்து நடத்தக் கோரியும் இந்திய மாணவர் சங்கம் வடசென்னை மாவட்டக் குழு சார்பில் தண்டையார்பேட்டை பணிமனை அருகே மாவட்ட துணைத் தலைவர் குணா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் காவியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.