ஆந்திர மாநில சட்டக் கல்லூரியில் பயிலும் தமிழக மாணவர்கள் திருப்பதி அருகே வடமலை பேட்டை சுங்கச் சாவடியில் அண்மையில் தாக்கப்பட்டதை கண்டித்து அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் என்.லெனின் தலைமையில் வெள்ளியன்று (அக் 28) பொன்னேரி நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.காளமேகம், லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் இ.மாசிலாமணி, அட்வகேட் அசோசியேஷன் சங்க செயலாளர் எஸ்.அமரகவி, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் கே.சரவணன் உட்பட பலர் கலந்து பேசினர்.