districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்

ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற கோரி வண்ணாரப்பேட்டை லாலாகுண்டா ஷாகின் பாக் போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திரளாக பங்கேற்று போராட்டத்திற்கு வலுசேர்த்தனர். இது அப்பகுதி இஸ்லாமிய மக்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தியது. இந்த வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் முடிந்து வருடங்கள் ஆனாலும் ரம்ஜான் நோன்பு திறக்கும் இப்தார் விருந்துக்கு அந்த போராட்டக்குழுவினர் வாலிபர் சங்கத்தினருக்கு அழைப்பு விடுத்தனர். இந்நிகழ்வில் வாலிபர்சங்க வடசென்னை மாவட்டச்செயலாளர் எல்.பி.சரவணதமிழன், பொருளாளர் முருகேசன், ராயபுரம் பகுதிச்செயலாளர் நீதிதேவன், ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜேஜே.எபினேசர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.