மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினத்தையொட்டி ஞாயிறன்று (மார்ச் 27) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இணைந்து ரத்ததான முகாமை நடத்தின. மாவட்டத் தலைவர் ஆர்.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் மாநில துணைச் செயலாளர் ம.பா.நந்தன், மாவட்டச் செயலாளர் சி.எம்.பிரகாஷ், பொருளாளர் சி.முருகன், வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல், ரத்த வங்கி மருத்துவ அலுவலர் மணிகண்டன், வழக்கறிஞர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.அபிராமன், முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.பிரகலநாதன், ஆவணப்பட இயக்குனர் ‘பூ’ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.