உலக முதியோர் தினத்தையொட்டி அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர்கள் மற்றும் அகில இந்திய அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர்கள் சங்கங்களின் சார்பில் கோரிக்கை வாயிற்கூட்டம் புதுச்சேரி தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்றது. சங்கத்தின் தலைவர்கள் ராமகிருஷ்ணன், முத்து ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தை விலக்கி சிஐடியு மாநில துணைத் தலைவர் கொளஞ்சியப்பன், புதுச்சேரி ஓய்வூதியர் சங்க கவுரவத் தலைவர் நடராஜன், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.